Skip to main content

மனிதம்

மனிதர்களே... 

மனிதத்தை பயிர் செய்யாமல்

தேசியம் விதைத்து என்ன பயன்? 

இரவுகளும் பகல்களும்

போட்டி போட்டு சுழன்றாலும்

உன் மீது இழைக்கப்பட்ட

வரலாற்று பிழை என்றுமே மாறாது...

நேற்று எச்சத்திலும்... மிச்சத்திலும்

வாழ்வை நடத்தினாய்.... இன்று

கடமை தவறிய மனிதத்திற்கு - உன்

உதிரத்தையே உரமாக்கி விட்டாய்.. 

வருங்கால தலைமுறையாகிலும்

மனிதநேயத்தை

உயர்த்தி பிடிக்கட்டும்...

மனிதத்தை விதைத்து

அன்பை அறுவடை செய்ய....

இனி வீறு கொண்டு எழட்டும்...

பாறைகளின் இடுக்கே

துளைத்தெழும் புல்லைபோல....

வன்முறை எனும் முகத்திரையை கிழிக்க

புழுதி கிளப்பி அதிர புறப்படட்டும்...!

Comments

Post a Comment

Popular posts from this blog

உன் மீதான என் காதல் ♥️

அவன் மீதான என் காதலை வெளிப்படுத்திய பின் முதல் சந்திப்பு என்னவனுடன்... ♥️மாலை பொழுதில் அவனை சந்திக்க போகும் அந்த தருணத்திற்காக சூரிய உதயத்தில் இருந்தே படபடத்து கொ...

ஆண்டாளின் காதல்

♥️கண் பார்த்து கதைக்க முடியாத அந்த கடவுளை கூட உன் அன்பால் வென்றுவிட்டாய்... ♥️ திருமண பந்தலுக்கு முன்பே நீ சூடிய மலர் மாலையை உன்னவனுக்கு சூடி அழகு பார்த்தாய்... ♥️ உன் ...