Skip to main content

சினேகிதனே....

கார்த்தி... 
நம் அளவற்ற அன்பின் வெளிப்பாடே... 
நாம் இடும் அளவில்லா சண்டைகள்... 
நமது பாசப்பிணைப்பின் வெளிப்பாடே.. 
பேசவிடில் கூட புரிந்து கொள்ளும் அன்பு... 
எத்துணை சண்டையாயினும், 
எனக்கு எதுமெனில் தாங்காமல் துடிக்கும் உந்தன் தவிப்பு கூறிடும் உந்தன் பாசத்தை... 
எவ்வளவு கோபப்படுத்தினாலும்.... 
என்னை சிரிக்க வைக்க நீ எடுக்கும் முயற்சிகள் புரியவைத்திடும் உந்தன் அக்கறையை... 

என்ன நேரிடினும் சோகத்தில் உன் முக மாறுதலை கண்டிட்டால் பதைபதைத்து தான் போகிறேனடா எருமை... 

என் உயிர் வாங்கும் என் உயிரே.... 
உனக்காக என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மா..... 

Comments

Popular posts from this blog

என்னவனே

என்னவனே..  உன் காதலில் என்னை களவாடிய ராட்சசன் நீ...  உன்னருகே எப்போதும் இருக்க ஆசை..  உன் அணைப்பில் கரைந்திட ஆசை..  உன் கோபத்தில் மிரளந்திட ஆசை..  உன் சோகத்தில் தோள் கொடுக்க ஆசை..  உன் கவலைக்கு மருந்தாக ஆசை..  ஆயிரம் கதை பேசும் உன் பார்வையில் விழுந்திட ஆசை..  என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும்,  ஒவ்வொரு நிமிடமும்,  உன் பதியாய், தாயாய், தோழியாய்....  உன்னில் பாதியாய் இருந்திட ஆசையடா..  உன் காதல் யாவும் ரசித்திட.. கரைந்த நாட்கள் போதாதடா...  வரும் நம் கால கவிதை நாம் வாழ வேணும் என்னவனே... Hapieee valentines day dear.. 

அவன் காதலில் விழுந்தேன்

அவனது பார்வையும்.. பேச்சும் முதல் முதலில் என்னை பாதிக்கவே இல்லை.. அவ்வப்போது பார்க்கும் போது சிறு புன்னகை மட்டுமே பேசும்.. இருவரும் ஒரு நாள் பேச தொடங்கினோம்... மலர்ந்த முழு நிலவாய் என் முகம் அவனுடன் பேசும் போது.. 'என்னங்க' என்று ஆரம்பித்த உரையாடல்.. 'போடா ' என்று உரிமையுடன் மாறியது... சரி சரி என்று பிரியமானவனாக அவனது பதில்கள் தொடங்கி.. ஒன்றுமே சொல்லாமல் ஓரக்கண்ணடித்து அவன் புன்னகிக்கையில் கேள்விகளே மறந்தது... காதலில் விழுந்து விட்டோம் என தெரிந்தும் இருவருக்கும் சொல்ல மனமில்லை.. அர்த்தமற்ற வாழ்வை அழகாக்கி செதுக்கும் அவன் மேல் ஒவ்வொரு முறையும் காதலுற்றேன்... என்னை அணைத்து மீள்கையில் தாயின் கைகள் போல் அவனது கைகள் மீதும்... அழுது சாய்கையில் தந்தையை போல்  தோள்கள் தரும் அவனது தோள்கள் மீதும் கூட்டத்தில் என்னை மட்டும் தேடும் அவனது கண்கள் மீதும்.. இறுக்கமாக பிடித்து கொண்டு நடக்கும் அவனது விரல்கள் மீதும்.. சண்டையிடும் போது அவன் கோபத்தின் மீதும்.. சண்டையில் என்னை சமாதானம் செய்யும் போது அவன் செய்யும் குழந்தை தனமான செயல்கள் மீதும்... என் மீதுள்ள அக்கரையில் நண்பர்களை ம...

மனிதம்

மனிதர்களே...  மனிதத்தை பயிர் செய்யாமல் தேசியம் விதைத்து என்ன பயன்?  இரவுகளும் பகல்களும் போட்டி போட்டு சுழன்றாலும் உன் மீது இழைக்கப்பட்ட வரலாற்று பிழை என்றுமே மாறாது... நேற்று எச்சத்திலும்... மிச்சத்திலும் வாழ்வை நடத்தினாய்.... இன்று கடமை தவறிய மனிதத்திற்கு - உன் உதிரத்தையே உரமாக்கி விட்டாய்..  வருங்கால தலைமுறையாகிலும் மனிதநேயத்தை உயர்த்தி பிடிக்கட்டும்... மனிதத்தை விதைத்து அன்பை அறுவடை செய்ய.... இனி வீறு கொண்டு எழட்டும்... பாறைகளின் இடுக்கே துளைத்தெழும் புல்லைபோல.... வன்முறை எனும் முகத்திரையை கிழிக்க புழுதி கிளப்பி அதிர புறப்படட்டும்...!